மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அறிக்கை தொடர்பான விவாதம் இன்றைய நாள் முழுவதும் இடம்பெறவுள்ளது. எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பிப்பது தொடர்பில் கட்சி தலைவர்கள் கூட்டம் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களின் ஒன்றுகூடலின்போது பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.