சுவசரிய அம்புலன்ஸ் சேவையின் மற்றுமொரு கட்டம் இன்று ஊவா மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. ஊவா சக்தி மன்றம் என்ற அமைப்பை சேர்ந்த சுரேஷ் நடேசன் இந்த சேவை தொடர்பாக தெரிவிக்கையில், இதன் மூலம் ஊவா மாகாண மக்கள் பெரும் அனுகூலம் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
இந்த மாகாணத்தில் பல பின்தங்கிய பிரதேசங்கள் இருக்கின்றன. கஷ்டப்படும் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். இந்த தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பங்களில் பெருந்தொகை பணம் செலவழித்து நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இதற்கு சுவசரிய அம்புலன்ஸ் சேவை சிறந்த பரிகாரமாக அமையும் என சுரேஷ் நடேசன் குறிப்பிட்டார்