சட்டவிரோதமாக நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட ஒருதொகை தங்க ஆபரணங்களுடன் நான்கு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரிலிருந்து, இந்தியாவுக்கு பயணித்த அவர்கள், ஜெட் எயார்வேஸ் விமானத்தினூடாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து 95 இலட்சத்து 71 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நான்கு பெண்களும் தங்க ஆபரணங்களை அணிந்து வந்துள்ளதாக விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.