பல்வேறு இரசாயன திரவங்களை பயன்படுத்தி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பழங்களை பழுக்கச்செய்பவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இவ்வாறு இரசாயன திரவங்களை பயன்படுத்தி பழங்களை பழுக்கச் செய்யும் நடவடிக்கையை தடுக்கும் நோக்கில் மேலும் பல துரித வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்
இரசாயனத்தை பயன்படுத்தி பழங்களை பழுக்கச்செய்பவர்களை கைதுசெய்ய நடவடிக்கை
படிக்க 0 நிமிடங்கள்