ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை வடக்கிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். வடக்கு மீன்பிடித்துறை நவோதயம் எனும் செயற்திட்டத்தின்கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. அவற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார். மயிலிட்டி மீன்பிடித்துறை புனரமைப்பு பணிகளையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார். மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. மீனவர்களின் நலன்கருதி அதில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.