மாதம்பே – குளியாப்பிட்டிய வீதியில் மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் குறித்த பெண் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.