மதவாச்சி முதல் தலைமன்னார் வரையான ரயில் போக்குவரத்தை இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. மூன்று மாத காலங்களுக் கு போக்குவரத்து இடைநிறுத்தப்படும். புகையிரத வீதியின் பாலமொன்று புனரமைக்கப்படவுள்ளமையினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புகையிர வீதி மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் மதவாச்சி முதல் தலைமன்னார் வரை இலங்கை போக்குவரத்து சபையின் விசேட பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படுமென புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது