நியூசிலாந்தில் வெளிநாட்டு பிரஜைகள் வீடுகளை வாங்குவதை தடுக்கும் வகையிலும் அந்நாட்டின் வீடில்லா மக்கள் இலகுவில் வீடுகளை கொள்வனவு செய்யும் இலகுவாக்கும் பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது நியூசிலாந்தில் வசிக்கும் நபர்களுக்கு இந்த தடை பொருந்தாது. நியூசிலாந்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தகம் ஒப்பந்தம் காரணமாக அவுஸ்திரேலியா மற்றும் சிங்கபூரை சேர்ந்த மக்களுக்கும்; எவ்வித பாதிப்பும் ஏற்படாது. நியூசிலாந்தில் வெளிநாட்டு பிரஜைகள் அதிகளவானோர் வீடுகளை கொள்வனவு செய்வதால் அங்கு வீடுகளின் விலை அதிகரித்துள்ளது.