கிளிநொச்சியிலிருந்து இரணைமடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது,அதேதிசையில் சென்ற இராணுவத்தினரின் ட்ரக் ரகவாகனம் மோதியதில் இன்று விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி 155ம் கட்டைபகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய கிளிநொச்சிபாரதிபுரம் பகுதியைசேர்ந்த 51 வயதான க.குகனேஸ்வரன் என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிபொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.இந்நிலையில் இராணுவ ட்ரக் வாகன சாரதியையும் கைதுசெய்துள்ளனர். இதேவேளை குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சிலமணிநேரம் அமைதியின்மை ஏற்பட்டது.