புனித ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே 20ம் திகதி முதலே முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் முஸ்லிம் விவகார அமைச்சு, கல்வியமைச்சிடம் விடுத்த கோரிக்கைக்கமைய நாளைய தினம் முதல் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.