புறக்கோட்டை மிதக்கும் சந்தை தொகுதிக்கு முன்பாக பஸ் வண்டியொன்றில் சிக்குண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் பணியாற்றும் பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.