ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகிறது. 39 பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 428 மதிப்பீட்டு குழுவினூடாக குறித்த திருத்தப்பணிகள் இடம்பெறவுள்ளன. இதற்கென 6 ஆயிரத்து 848 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ம் திகதி வரை மதிப்பீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன. இம்முறை 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். 3 ஆயிரத்து 50 மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.