கொட்டகலை ட்ரேட்டன் பகுதியில் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருவரும் நீண்ட நாட்களாக சூட்சுமமான முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் மேலும் சிலரும் தொடர்புபட்டிருப்பதாக கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதானவர்கள் கொட்டகலை பகுதியை சேர்ந்தவர்களெனவும் அவர்களை இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் கலால் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.