பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ 2007 ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட ஒப்பந்தம் ஒன்றினால் நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடவத்தையில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்கள் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2007 ம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபே ராஜபக்ஷ அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்;டார். அமெரிக்க படைகள் விரும்பிய நேரத்தில் எமது நாட்டுக்கு வந்து முகாம்களை அமைத்து அவர்களுக்கு இங்கிருப்பதற்கான வாய்ப்புக்களை வழங்கமுடியும் என்பதே ஒப்பந்தமாகும். இதனால் எமது நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்க தூதுவருடன் அவர் அன்று இவ ஒப்பந்தத்தை செய்துகொண்டார். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்து கொடுப்பதும் எமது பொறுப்பாகும் என்றும் அவ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கை இராணுவம் விரும்பினால் அமெரிக்கா சென்று முகாமிடவும் அங்கு எமது படையினருக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு அந்நாடு இணங்கியுள்ளது. எமது இராணுவம் அமெரிக்கா சென்று எப்போதாவது முகாமிடுமா? அவ் ஒப்பந்தத்தின் ஊடாக எமது இறைமைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.