சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இன்று தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் எதுவித பேதங்களும் இன்றி வாழ்ந்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இனவாதம் இன்றி தோட்டப்புற மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழல் இன்று உருவாகியுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் ஊடாக பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்திபுரம் கிராமத்தை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில் மகாத்மா காந்தி இலங்கைக்கு வந்த காலத்தில்இ மலையக மக்கள் மீது விசேட கவனம் செலுத்தினார். அதன் நினைவாக இன்று மகாத்மா காந்தியின் பெயரால் டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய வீடமைப்பு கிராமத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இன்று தோட்ட மக்களுக்கு சொந்தமான நிலத்தில் தனி வீடு உள்ளது. ற்கு தனியான சுத்தமான குடிநீர் திட்டமும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கையில் ஏனைய மக்களைப் போல வாழக்கூடிய உண்மையான இலங்கையர்களாக உரிமை பெற்றுள்ளார்கள்.
இந்த நாட்டில் அனைவருக்கும் கிராமம் என்ற வகையில் அனைத்து சமூகங்களும் கிராமங்களில் வாழ கூடிய அபிவிருத்தி திட்டங்கள் எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கத்தால் மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றிவருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
மலையக மாணவர்களுக்கு உயர்தரத்தில் விஞ்ஞானம் பிரிவில் கல்வி கற்பதற்கான வசதிகளை பெற்றுத்தருவதற்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டது.
இதேவேளை மலையகத்தில் வீட்டுத்திட்டத்துடன் விஞ்ஞானப் பிரிவு கொண்ட பாடசாலைகளை உருவாக்கவுள்ளதாகவும், தோட்ட பகுதியில் உள்ள மருத்துவ நிலையங்களை அரசாங்க நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டப் பகுதிகளை கிராம மயமாக்குவதற்கு அமைச்சர் திகாம்பரத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும். சிலர் கிராமங்களை இல்லாதொழிக்க கம்பெரலிய எனும் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 60 000 வீடுகளை வழங்கியது. ஒரு தொகை வீடுகள் மலையகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
ஏனைய வீடுகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்று கொழும்பில் உள்ளவர்கள் யாழ்ப்பாணம் நைனாதீவுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர் அதேபோன்று யாழில் உள்ளவர்கள் கொழும்பைச் சுற்றிப்பார்த்து நிம்மதியாக செல்கின்றனர் இதற்குக்காரணம் சமகால நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட நல்லிணக்க நடவடிக்கைகளேயாகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
நிகழ்வில் இந்திய உயர்;ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.