இலங்கையின் தென்மேற்கு பகுதியில் காற்று மற்றும் மழையுடன் கூடிய வானிலை நாளை முதல் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கபடுகிறது. இதேவேளை நாட்டின் சில கடற்பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.