திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் 36 மில்லியன் ரூபாவுக்கும் கூடுதலான தொகை நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு இடையிலான வழக்கு ஒக்டோபர் 9ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியை பயன்படுத்தி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜி-ஐ குழாய்களை கொள்வனவு செய்து உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு இறுதி பகுதியில் கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும் இவை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமையினால் இவ்வழக்கினை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியும் என அரச சட்டதரணி தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் ஆராய்ந்து சட்டமா அதிபரின் நிலைப்பாட்டினை எழுத்து மூலம் அடுத்த வழக்கு தவணையில் சமர்ப்பிக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்கு ஒக்டோபர் ஒன்பதாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.