5 ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கென சென்ற மாணவி ஒருவர் யானை தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். மஹியங்கணை ஹத்தத்தாவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி மற்றும் அவரது தாயாரே இவ்வாறு யானைத்தாக்குதலுக்குள்ளாகியுள்ளகியது இருவரும் சிகிச்சைகளுக்காக மஹியங்கணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு சைக்கிளில் செல்லும் போது இவ்வாறு யானை தாக்கியுள்ளதாக மஹியங்கணை பொலிசார் தெரிவித்துள்ளனர்.