பருத்திதுறை முதல் தேவேந்திர முனை வரை துரித அபிவிருத்தி புரட்சி இடம்பெற்று வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/tOIXo8YCRTI”]
இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதமர் கிளிநொச்சி அறிவியல் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் பீடத்திற்கான கட்டடங்கள் மற்றும் மாணவர் விடுதி, விரிவுரையாளர் அலுவலகம் ஆகியவற்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இதற்காக 2100 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இவ்வைபவத்தில் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், சித்தார்த்தன், வட மாகாண சபை உறுப்பினர்கள், யாழ். பல்கலை விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.