இந்தியாவில் கல்குவாரியொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். சம்பவம் இந்தியாவின் ஆந்திரா பிரதேஷ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த கல்குவாரியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றுவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு கல்குவாரியின் வழமையான பணிகள் இடம்பெற்றிருந்த வேளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. கற்களை தகர்க்க பயன்படுத்தப்படும் ஜெலடின் குச்சிகள் எதிர்பாராத விதமாக வெடித்தமையினால் விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விபத்து தொடர்பில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அனுதாபம் வெளியிட்டுள்ளார்.