130 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருந்த நிலையில் சந்தேக நபர் ஒருவர் மன்னாரில் வைத்து விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன், சந்தேக நபர் பொலிஸ் போதைப்பொருள் அலுவலகத்திற்கு மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.