மன்னார் மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசத்தை புனிதபிரதேசமாக பிரகடனப்படுத்தி, அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்மொழிந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்தப் பிரதேசம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால், மடு தேவாலயத்தை அண்மித்த பகுதி குறைந்த வசதிகளை கொண்ட பகுதியாக மாறியது.
ஜனாதிபதியின் யோசனைக்கு அமைய, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சுகாதாரம், நீர் விநியோகம் போன்ற வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ஒரு முக்கிய இடமாக மடு தேவாலயத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டத் தக்கதாகும் என்று அனுராதபுரம் திருச்சபையைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பிதா கிரிஷாந்த சிறிலால் ஆண்டகை தெரிவித்துள்ளார்.