இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மடவளை பகுதியில் வைத்தே இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் முருதொலவ பகுதியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமாக பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
இரண்டு பிக்குகளும் 4 பாடசாலை மாணவர்களும் இந்த விபத்தில் உள்ளடங்குகின்றனர்.வாகன சாரதியின் கவனயீனமே இந்த விபத்துக்கான காரணமென தெரிய வந்துள்ளது.
காயமடைந்தவர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.