உலக சுகாதார அமைப்பின் உப தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவை பாராட்டும் வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நாளை மறுதினம் பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு ‘நெலும் பொக்குண’ என்ற தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெறவுள்ளது.
சுகாதார போஷாக்கு மற்றும் வைத்தியத்துறை அமைச்சு, உலக சுகாதார அமைப்பு, சுகாதார பணியாளர்களின் சங்க சம்மேளனம் ஆகியன ஒன்றிணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கஇ உலக சுகாதார அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி டொக்டர் ராசியா பென்சே ஆகியோர் வைபவத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
பொதுமக்களின் நலனுக்காக சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் இவரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களும் நிகழ்வில் பாராட்டப்படும்.