மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் மொனராகல-கும்புக்கன பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாணிக்க கல் அகழ்வுக்காக பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.சந்தேக நபர்கள் நீண்ட காலமாக இவ்வாறு மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் குறிப்பட்டுள்ளனர்.புத்தள மாகொடயாய பகுதியை சேர்ந்த குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.