சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பொய்யான தகவல்களினால் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் அதிகளவான தகவல்கள் பொய்யானவையென பாராளுமன்ற குழு தெரிவித்துள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தள செயற்பாடுகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை பிரித்தானிய அரசாங்கத்திடம் கையளிக்க பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.