சீனாவை முன்மாதிரியாக கொண்டு பணியாற்ற விரும்புவதாக பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தெஹ்ரிக் ஈ இன்ஷாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 22 கால போராட்டத்திற்கு பின்னர் தனக்கு வெற்றியை தந்த இறைவனுக்கும் பாகிஸ்தான் மக்களுக்கும் இம்ரான் கான் நன்றி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் மக்கள் நல ஆட்சி உருவாக்கப்படும். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களை அதிலிருந்து மீட்க முன்னுரிமை வழங்கி செயற்படவுள்ளதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.