சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் கிரிக்கட் போட்டி தொடரில் மூன்று புது முகங்கள் இடம்பெறவுள்ளன.
ஐந்து ஒருநாள் போட்டிகளை கொண்ட போட்டி தொடரில் இலங்கை அணிக்கு எஞ்சலோ மெத்திவ்ஸ் தலைமை தாங்குகின்றார். இறுதியாக இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டி தொடரில் இருந்த ஏழு வீரர்கள் இம்முறை தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இடம்பெறவில்லை. டெஸ்ட் அணி தலைவர் தினேஸ் சந்திமாலும் இதில் அடங்குகின்றார். 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் தசுன் சானக்க அணியில் இணைக்கப்பட்டுள்ளார். புதிய பந்துவீச்சாளர்களாக கசுன் ரஜித மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். சகல துறை ஆட்டக்காரராக செஹான் ஜயசூரிய இணைந்துள்ளார். ஐந்து போட்டிகளை கொண்ட முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி தம்புள்ளையில் நடைபெறும்.