ஆப்கானிஸ்தானின் காபூல் நகர சர்வதேச விமானநிலையத்தின் அருகில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததுடன் 60 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் உப ஜனாதிபதி அப்துல் ரஷூட்டை இலக்கு வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு உரிமைகோரியுள்ளது.