மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீர் நிரப்பும் பணிகளின் ஆரம்ப நிகழ்வின் நேரடி ஊடக பணியை ஐரிஎன் ஊடக வலையமைப்பே மேற்கொள்கின்றது.
இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் இடம்பெறும் மிகப்பெரிய நேரடி ஊடக பணியை ஐரிஎன் பொறுப்பேற்றுள்ளது. மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் களுகங்கை நீர் நிரப்பும் நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு நாளைஇடம்பெறும் .மலைச்சாரல்கள் மிக்க பகுதியில் மிகச்சிரமமாக சுற்றுவட்டத்தின் 10 இடங்களிலிருந்து இந்நேரடி ஒளிபரப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையின் முன்னோடி தொலைக்காட்சியான ஐரிஎன் தனது 39 ஆண்டுகால அனுபவத்துடன் இந்த சவால்மிகு பணியை பொறுப்பேற்றுள்ளது. எங்கும் எப்போதும் முன்னோடி ஊடக பணியை மேற்கொள்ளும் ஐரிஎன் ஊடக பணியாக இதனை முன்னெடுக்கின்றது. 25 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து 2 இடங்களை மையமாககொண்டு வெளிநடமாடும் ஒளிபரப்பு வண்டிகளை பயன்படுத்தி விக்ரமசிங்க புர தலைமையகத்தின் பிரதான கலையகத்துடன் தொடர்புபடுத்தி இந்நேரடி ஒளிபரப்பு இடம்பெறவுள்ளது. 22 கமராக்கள் பயன்படுத்தப்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இப்பணியை மு:ன்னெடுக்கவுள்ளனர்.
ஐரிஎன் ஊடக வலையமைப்பு வெளிகள ஒளிபதிவு பிரிவில் நான் இருக்கின்றேன். இது எச்டி தொழில்நுட்பத்துடன் கூடிய வெளிகள ஒளிபரப்பு வண்டியாகும். மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் நிரப்பும் நடவடிக்கை நேரடியாக ஒளிபரப்பப்படும். 2 வெளிகள வண்டிகளையும் பல கமரக்காளையும் நாம் இதற்கென பயன்படுத்தவுள்ளோம். ஒரு பாரிய பணியை நாம் மேற்கொள்ளவுள்ளோம்;. இது நேரடிஒளிபரப்பு துறையின் மிகப்பெரிய ஒரு முயற்சியாக அமையும்.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலுள்ள புத்தர் சிலை திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் களுகங்கை நீர்த்தேக்கத்தின் வளவிலிருந்து நேரடியாக ஒளிபரப்ப்படும். மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு ஜனாதிபதி வருகை தந்ததன் பின்னர் நேரடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப 8 கமராக்கள் பயன்படுத்தப்படும். புத்தர் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 2 கருவிகளை பிறிதொரு இடத்தில் திறந்து வைப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேநேரம் மொரகஹகந்த வரை களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீரை எடுத்துச் செல்லும் 9 கிலோ மீட்டர் தூரத்தை கொண்ட சுரங்க வழி பாதையின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இடம் முதல் ஏனைய இடங்களில் அது மு:ன்னெடுக்கப்படும் விதத்தையும் நேரடியாக ஒளிபரப்ப ஐரிஎன் ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீர் நிரப்பும் பணியின் ஆரம்ப நிகழ்வு இயற்கையின் வளங்களை மக்களோடு சங்கமிக்கும் வகையில் முன்னெடுக்கவுள்ளது. தொடர்ந்து பாரிய நிர்மாண பணிகள் இடம்பெற்று வரும்இப்பகுதியில் போக்குவரத்தும் ஒரு இலகுவான பணியல்ல. மனித வளத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் முழு அளவில் பயன்படுத்தி சகல சிரமங்களையும் வெற்றி கொள்ள ஐரிஎன் ஊழியர்கள் தயாராகவுள்ளனர்.
பலத்த காற்று, வெயில் மற்றும் ஏனைய பல்வேறு இயற்கையின் தாக்கங்களுக்கு முகம் கொடுத்து இப்பணியை முன்னெடுக்கின்றோம்.
ஐரிஎன் ஊடக வலையமைப்பு இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் மற்றொரு அனுபவத்துடன் இந்த பாரிய திட்டத்தை முழு உலகிற்கு முன்வைக்க தயாராகவிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே.