வேட்டைக்காக சென்றவர் சடலமாக திரும்பிய சம்பவமொன்று திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமலங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.மிருக வேட்டைக்காக செல்லும் போது வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி வெடித்து இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.