விபச்சார விடுதியொன்று சுற்றி வளைக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிரிய பகுதியில் ஆயுர்வதே நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.கடுகண்ணாவ மற்றும் தெஹிஅத்தகண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 39, 43 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸார் இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.