அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க எத்தியோப்பிய பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய எத்தியோப்பியா தீர்மானித்துள்ளது. அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பான யோசனைக்கு கடந்த 5ம் திகதி எத்தியோப்பிய பாராளுமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையிலேயே அதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைப்படுத்தப்பட்டுள்ள அரசியல் கைதிகள் எதிர்வரும் சில தினங்களில் விடுவிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக எரிதியா, கென்யா, சோமாலியா மற்றும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சமடைந்துள்ளவர்கள் மீண்டும் நாடு திரும்பவேண்டுமென எத்தியோப்பிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.