சீனா – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு இடம்பெறும். பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த சிறுநீரக வைத்தியசாலை தெற்காசிவில் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலையாக அடையாளப்படுத்தப்படவுள்ளது. இதற்கென 12 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. நவீன ஆய்வுகூடங்கள் மற்றும் அதியுயர் தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியதாக குறித்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும். 2020ம் ஆண்டு ஜுலை மாதமளவில் நிர்மாணப்பணிகள் நிறைவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.