வெல்லவாய படகலகந்த கல்கொரியகம வனப்பகுதியில் பரவிய தீயினால் 4 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இராணுவம் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.