சீனாவின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 19-வது மாடியில் இருந்து சிறுவன் ஒருவன் தவறி விழுந்ததில் உயிருக்கு போராடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிறுவன் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளான். குறித்த சிறுவன் தூங்கும் போது சிறுவனின் பாட்டி வெளியே சென்றுள்ளார். இதற்கிடையே, கண்விழித்த சிறுவன் தனது பாட்டியை தேடியுள்ளான். பாட்டியை காணாததால் பால்கனி பகுதிக்கு வந்த அச்சிறுவன் அங்கிருந்து தவறி விழுந்துள்ளான். ஆனால், அதிர்ஷ்டவசமாக பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கம்பியை கெட்டியாக பிடித்தபடி கீழே விழாமல் சிறுவன் உயிர் தப்பியுள்ளான். அப்பகுதி வழியாக சென்ற வழிப்போக்கர் ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் அந்தரத்தில் தொங்கியபடி இருப்பதை அவதானித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பொலிஸாரும் மீட்பு குழுவினர் சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர்.