இந்தியாவில் இரு ஆண்டுகளில் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 333 கற்பழிப்பு வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014 முதல் 2016 ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே குறித்த வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஒருவர் இந்திய பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மைக்காலமாக இந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்த குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டுமென பல்வேறு தரப்பினாலும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.