ஐந்தாவது திறந்த அரசாங்க கூட்டுறவு மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜோர்ஜியாவுக்கு சென்றுள்ளார். பிரஜைகள் ஈடுபாடு, ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் சிறந்த பொதுச்சேவை வழிகாட்டல் போன்ற விடயங்கள் மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளன. இன்றையதினம் இடம்பெறவுள்ள மாநாட்டின் உயர்மட்ட தலைவர்களின் கலந்துரையாடலில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இதேவேளை ஜோர்ஜிய ஜனாதிபதி ஜியோஜி மாக்வெலஸ்விலியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஜனாதிபதி ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/dmWPvGIb9oo”]