பெரூ இராச்சியத்தில் 60 நாட்கள் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொலம்பிய எல்லைப்பகுதியிலுள்ள பிரதேசங்களில் குறித்த அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் தீவிரவாத செயற்பாடுகள் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளன. அதனை கட்டுப்படுத்த ஒன்றிணைந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெரூ இராச்சியம் தெரிவித்துள்ளது. இதற்கு கொலம்பியாவின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுள்ளது. இப்பகுதிகளில் கடந்த சில தினங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 50 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.