உலகின் அதிவேக தடகள வீரரென வர்ணிக்கப்படும் உசேன் போல்ட் அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட சங்கத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு முதல்தர கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்கும் பொருட்டே இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப்போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்களை அவர் குவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்க முடிவெடுத்துள்ளார். அதற்கமைய எதிர்காலத்தில் முதற்தர கால்பந்தாட்ட போட்டிகளுக்கு உசேன் போல்டின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொழில் ரீதியான கால்பந்தாட்ட வீரராக வலம்வர எதிர்பார்த்துள்ளதாக உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.