ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஜோர்ஜியாவுக்கு சென்றுள்ளார். இத்தாலியில் இடம்பெற்ற உலக வனாந்தர வார மாநாடு மற்றும் உலக வனாந்தர குழுவின் 24வது அமர்வில் ஜனாதிபதி நேற்று கலந்துகொண்டார். இந்நிலையில் அவர் இன்று ஜோர்ஜியா நோக்கி பயணமானார். அங்கு பகிரங்க அரச பங்காளித்துவ அமைப்பின் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஜனாதிபதிக்கு அங்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. நாளை இம்மாநாடு ஆரம்பமாகவுள்ள நிலையில் முதல் நாளிலேயே ஜனாதிபதி இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பணிப்பாளர் ச்சமூதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.