இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் ஐரோப்பிய சங்கத்தின் இலங்கை உயர்ஸ்தானிகர் டுங்லாய் மாஹியை சந்தித்துள்ளார். அதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென முறையான கொள்கையை ஏற்படுத்துவதற்கான யோசனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஐரோப்பிய சங்கம் குறிப்பிட்டுள்ளது. 2025ம் ஆண்டை எட்டும் போது புதிய கைத்தொழில் வலயமொன்றை ஏற்படுத்துவதற்கும் நவீனங்களை உள்ளடக்கிய திட்டங்களை வகுக்கவும் இருவருக்குமிடையிலான கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.