21ஆவது பீபா உலக கிண்ண கால்பந்து கிண்ணத்தை பிரானஸ் அணி கைப்பற்றி சம்பியனாகியுள்ளது.நேற்று லுஸ்கினி மைதானத்தில் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த 2018 உலகக்கிண்ண இறுதிப்போட்டி பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையில் இரவு 8.30க்கு ஆரம்பமாகியது.இரு அணிகளும் பரபரப்பான போட்டிகளுக்கு மத்தியில் வெற்றியீட்டி போராடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தது.இரு அணிகளுமே பலமான நிலையிலுள்ள போதும் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை கணித்து சொல்வது கூட கால்பந்து விமர்சகர்களுக்கு கடினமாகவே இருந்தது.ஆனால் பலருடைய பலத்த எதிர்பார்ப்பாக இருந்ததெல்லாம் 1998ஆம் ஆண்டு அரையிறுதி ஆட்டத்திலே 2-1 எனும் அடிப்படையில் குரேஷியாவை தோற்கடித்து பிரான்ஸ் வெற்றியீட்டியிருந்தது.அந்த பகையை தீர்த்துக்கொள்ள இந்த சந்தர்ப்பத்தை குரோஷியா பயன்படுத்துமென பலரும் எதிர்பார்த்திருந்தனர்.எனினும் போட்டி பலத்த விறுவிறுப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
ஆரம்பத்திலே இரு அணிகளும் தலா ஒரு கோல்களை போட்டாலும் பின்னர் பிரான்ஸ் 3 கோல்களை போட்டு 4ஆவது கோலையும் அடித்தது.பின்னர் போராடிய குரோஷியா 2ஆவது கோலை மிக லாவகமாக போட்டது.பின்னர் போட்டி இறுதி தருணங்களை நெருங்கி கொண்டிருந்த போது குரோஷியா கோல் போட எத்தனிக்குமென புரிந்து கொண்ட பிராண்ஸ் வீரர்கள் கோலட எதனையும் போடாமல் தடுப்பதிலே கவனமாக இருந்தார்கள்.இறுதியில் குறித்த நேரத்திற்குள் பிரானஸ் 4-2 எனும் கோல்கள் அடிப்படையில் முன்னிலை பெற்றமையினால் வெற்றியீட்டி 21ஆவது கால்பந்து சம்பியன் என்ற மகுடத்தையும் சுவீகரித்துக்கொண்டது.பிரான்ஸ் பெற்ற 2ஆவது கால்பந்து கிண்ணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.