‘கம்பெரலிய’ என்ற அபிவிருத்தித் திட்டம் கிராமத்தை வளம் படுத்தும் திட்டமாகும். கிராமத்திற்கு பணத்தை கொண்டுவருவதற்கும் வழிவகுக்கிறது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
‘ கிராம மக்களின் தொழில்வாண்மையை வலுப்படுத்தும் ‘கம்பெரலிய’ என்ற அபிவிருத்தித் திட்டம்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் குருநாகல் மாவட்டத்தில் நிக்கவெரட்டி ரஸ்யாகபுர பிரதேச செயலாளர் பிரிவில் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.
கலுகெற்றிய – புலத்கம குளத்தை மறுசீரமைக்கும் பணியும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 3.5 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுகிறது.
இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுப்பதற்கு விவசாய அமைப்புகளின் விவசாய அமைப்புகளின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எமுன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகாமையில் தொழில்பேட்டை நிர்மாணிக்கப்படுகிறது. இதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது முக்கிய நோக்கமாகும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர நாட்டில் சமீபத்தில் ஆரம்பிக்கப்ப்டட பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டம் கம்பெரலிய திட்டம் என்று கூறினார். இதற்காக அரசாங்கம் 80 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்கின்றது. எதிர்வரும் 5 மாத காலப்பகுதியில் ஆயிரத்து 300 குளங்கள் புனரமைக்கப்பட உள்ளன. 6,936 கிராமிய வீதிகள் சீரமைக்கப்பட உள்ளன. 8,930 பாடசாலைகளுக்கு இயற்கை கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன. 500 விளையாட்டு மைதானங்கள் புனரமைக்கப்பட உள்ளன.ஒரு விளையாட்டு மைதானத்திற்காக 10 இலட்சம் ரூபா செலவிடப்படும். பிரதேச செயலக மட்டத்தில் வாராந்த சந்தை, பசுமைப் பூங்கா ஆகியன அமைக்கப்படும். மின்சார வசதிகளற்ற வீடுகளுக்கு மின்சாரம் பெற்றுக் கொடுக்கப்படும். இதன் மூலம் சுமார் 50 குடிசைவாழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும். இவ்வாறான வீடுகளுக்கு கூரைத்தகடுகளுடனான நிரந்தர கூரை அமைப்பதற்கான திட்டமும் முன்னெடுக்கப்படும். கிராமப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டார்.
.
இதன் ஊடாக எதிர்வரும் 12 மாத காலப்பகுதியில் 1 இலட்சம் தொழில்வாண்மையாளர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். மக்களை மேம்படுத்தும் அபிவிருத்தி யுத்தம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மங்கள வமரவீர குறிப்பிட்டார்.
ஊழல் மற்றும் வன்முறை நிறைந்த நாட்டையே பொறுப்பேற்றோம் என்று குறிப்பிட்ட அமைச்சர் , ராஜபக்ஷமார் நாட்டை இருள் யுகத்திற்கு தள்ளினர் என்றும் கூறினார். இதிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதியினாலும் பிரதமரினால் முடிந்துள்ளது. நாட்டில் சமாதானம், நல்லிணக்கம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கம்பெரலிய வேலைத்திட்டம் கிராமிய பொருளாதாரத்தை வலுவூட்டும் திட்டம் என்று கூறினார். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராம மக்கள் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
நிதி மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்க உள்ளிட்ட பலர் நிகழ்வில் உரையாற்றினார்கள்.