பேண்தகு அபிவிருத்தி இலக்கை அடைந்து கொள்ளும் போது வனங்களுக்கு வழங்க வேண்டிய பங்களிப்பு குறித்து நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ரோம் நோக்கி நேற்று பயணமானார்.நாளை நடைபெறவுள்ள இம்மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.ஐக்கிய நாடுகள் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.