வலம்புரி என சந்தேகிக்கப்படும் ட்ரைடன் ரக இரு சங்குகளுடன் சந்தேக நபர்கள் இருவர் விஸ்வமடு பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். சந்தேக நபர்கள் சங்குகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம் பிரதேச சேர்ந்த சந்தேக நபர்களை இருவரையும், இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.