விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலைகளை மீள் பரிசீலனை செய்துஇ விலை மட்டங்களை தீர்மானிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் ஆழமாக ஆராயப்பட்டதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டார்.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் விசேட கூட்டம் இடம்பெற்றது. இதில் நிதியமைச்;சுஇ பெற்றோலிய கூட்டுத்தாபனம் போன்றவற்றின் அதிகாரிகள் பங்கேற்றார்கள். வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
சில சமயங்களில் ஒருமாத கால இடைவெளிக்குள் எரிபொருள் விலை குறைகின்ற சந்தர்ப்பங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. அத்தகைய சந்;தர்ப்பங்களில் விலை வீழ்ச்சியின் அனுகூலங்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.