பாகிஸ்தான் தேர்தல் பேரணியொன்றில் தற்கொலைகுண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 66 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தலீபான் அமைப்பினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல் பேரணியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இம்மாத ஆரம்ப பகுதியில் இடம்பெற்ற தாக்குதலொன்றில் 7 பேர் பலியாகியிருந்தனர். முன்னணி தலைவர்களை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாமென அந்நாட்டு பயங்கரவாத ஒழிப்பு பிரிவு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது பாதுகாப்பு செயற்பாடுகளில் மந்த நிலை காணப்படுவதால் தேர்தல் தினத்தை மாற்றவேண்டியுள்ளதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தேர்தலை எதிர்வரும் 25ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டது. பாதுகாப்பு பிரிவினர், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென பாகிஸ்தான் தேர்தல் ஆணையகம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.