வடகொரியா அணுவாயுத வேலைத்திட்டங்களை உடனடியாக நிறுத்தவேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 12ம் திகதி சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது, அணுவாயுத செயற்பாடுகளை முற்றாக கைவிடப்போவதாக வடகொரிய தலைவர் உறுதியளித்தார். அணுவாயுத செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதன் பின்னரே வடகொரியா மீதான தடைகள் நீக்கப்படுமென அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தது. இந்நிலையில் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.