ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தில் மூன்று நாள் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு தெஹ்ரானுக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 7 பேர் பலியான சம்பவத்தையடுத்தே குறித்த துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் ஏற்றிச்சென்ற பவுசரொன்று, பயணிகள் பஸ் ஒன்றின் மீது மோதியது. இதில் 7 பேர் பலியானதோடு, 9 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்தே இவ்வாறு அரசாங்கம் துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. ஈரானில் ஒழுங்கற்ற வீதிகள் மற்றும் பாரிய வாகன நெரிசல் காரணமாக அதிகளவான விபத்துக்கள் இடம்பெறுவதாக யுனிசெப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.